Thursday, March 28, 2024
Home » போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 1,467 சுற்றிவளைப்புகளில் 1,467 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 1,467 சுற்றிவளைப்புகளில் 1,467 பேர் கைது

- 1,431 ஆண்கள், 36 பெண்கள் கைது

by Rizwan Segu Mohideen
December 29, 2023 10:18 am 0 comment

– இதுவரை 16,689 சுற்றிவளைப்புகளில் 16,553 பேர் கைது

நச்சுப் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் விசேட சோதனை சுற்றிவளைப்புகள் (யுக்திய) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் (28) 1,467 சுற்றிவளைப்புகளில் 1,431 ஆண்கள் மற்றும் 36 பெண்கள் உள்ளிட்ட 1,467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 56 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகணத்தில் 741 சுற்றிவளைப்புகளில் 723 ஆண்களும் 23 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 161 சுற்றிவளைப்புகளில் 160 ஆண்களும் 01 பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (28) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்

  • ஹெரோயின் – 460.296 கிராம்
  • ஐஸ் – 653.362 கிராம்
  • கஞ்சா – 3.637 கி.கி.
  • கஞ்சா செடிகள் – 103,793
  • போதை மாத்திரைகள் – 562
  • ஏனைய போதைப்பொருட்கள் – 634.991 கிராம்

டிசம்பர் 17 முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளின் விபரம்

  • முழு சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை – 16,689
  • கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை – 16,553

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1,422 சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் ஒழிப்பு: 1,694 சுற்றிவளைப்புகளில் 1,676 பேர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT