இணைய மோசடியில் சிக்கி யாழ். நகரில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் செய்கின்றனர். அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோர் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த மோசடியினால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை (27) ஒருவர் 20 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும், மற்றையவர் 06 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.