Thursday, March 28, 2024
Home » நிலச்சரிவு, மரங்கள் முறிவால் போக்குவரத்து பெரும் பாதிப்பு
மலையகமெங்கும் கடும் மழை, காற்று

நிலச்சரிவு, மரங்கள் முறிவால் போக்குவரத்து பெரும் பாதிப்பு

நுவரெலியா, கந்தப்பளையில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின

by Gayan Abeykoon
December 29, 2023 8:08 am 0 comment

லையக பிரதேசங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை, காற்றின் காரணமாக, பதுளை மாவாட்டத்தின் பிரதான வீதிகளில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்த்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் பதுளை – தல்தென வீதியிலுள்ள வீட்டொன்று சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை – மஹியங்கனை வீதியில் பதுளையிலிருந்து 07 ஆம் கட்டை வரையிலான பகுதியில் இடைக்கிடை மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளமையினாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினாலும் அந்த வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைதுவ மத்திய நிலையம் தெரிவிந்துள்ளது.

நுவரெலியா கந்தபளை பகுதியில் அதிக தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புதன்கிழமை (27) இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

தலவாக்கலை குறூப், ஊவா சுழற்சி நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT