Home » அஸ்வெசும 02,03 ஆம் கட்டங்கள் பெப்ரவரியில் ஆரம்பிக்க திட்டம்

அஸ்வெசும 02,03 ஆம் கட்டங்கள் பெப்ரவரியில் ஆரம்பிக்க திட்டம்

by Gayan Abeykoon
December 29, 2023 8:16 am 0 comment

ஜனவரியில் விண்ணப்பங்கள் ஏற்பு

கிராமசேவகர்களுக்கும் ரூ.2,500 கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 05 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பமாகுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதேவேளை, அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அஸ்வெசும நலன் திட்டத்துக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT