Friday, March 29, 2024
Home » இரு தசாப்தங்களின் பின்னர் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 22 மாணவர்கள் சித்தி
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

இரு தசாப்தங்களின் பின்னர் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 22 மாணவர்கள் சித்தி

by Gayan Abeykoon
December 29, 2023 7:00 am 0 comment

சாய்ந்தமருது கமு/ கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) சுமார் 22 வருடங்களின் பின்னர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 22 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தெரிவித்தார்.

அதனடிப்படையில், எம்.எச்.எம். சுதைப் – 171, எம்.ஆர்.எப். றிக்ஸா – 171, எம்.ஆர்.எம்.றாபி – 171, எம்.எம். மஹ்தி – 169, எச்.எம்.எப்.எச். தமாமா – 164, எப்.என். ஹினா – 162, எம்.ஆர்.எம். சாபிக் – 158, எம்.ஆர்.எப். அய்ஷா – 157, ஏ.எச். ராஷித் – 156, என்.எப்.ஏ. மலீஹா – 156, எச்.எம்.எம். அல் – பதின் – 155, இஸட். ஐ. லீனா – 153, எம்.என்.எப். அஸாஹ் – 150, எம்.ஏ.எப்.இஸட். ஹானி – 150,

ஆர்.எச்.ஏ.எப். பதின் – 150, என்.எம்.கே. ஷஹீன் – 150, எம்.ஜே.எம். அக்ஸாப் – 149, எம்.ஏ.எப். இஸட். ஹப்ஸா – 148, என்.எப். சனீல் – 147, என்.ரீ. ஸீனத் – 146, எம்.எஸ்.எப். சாரா – 146, எம்.ஜே.எப். ஹனாஹ் – 145 ஆகியோரே வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இப்பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குக் தோற்றிய 139 மாணவர்களில் 127 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 91.36 சதவீத சித்தியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை வாழ்த்துவதுடன் இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் திருமதி கே.எம். ராபீக், உதவி அதிபர் எம்.ஏ.சீ.எல். நஜீம், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2-1

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT