92
கனேவல்பொல வனவிலங்கு வனத்தைச் சேர்ந்த கெக்கிராவ நெல்லியகம பகுதியில் நேற்று (28) காலை ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கி சென்று கொண்டிருந்த தபால் ரயிலுடன் மோதி குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலுடன் மோதி உயிரிழந்த காட்டு யானை கெக்கிராவ, நெல்லியகம, எம்புல்கஸ்வெவ, கலாவெவ மற்றும் ரிட்டிகல ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 25 வயதுடைய ஆண் யானை என வனவிலங்கு அலுவலகம் தெரிவித்தது.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்