89
வடக்கு ரயில் பாதையை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 07ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை 07ஆம் திகதி முதல் 06 மாத காலத்துக்கு மூடப்படுமென ரயில்வே பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் கொழும்பிலிருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைவரை மட்டுமே ரயில் சேவைகள் நடைபெறும்.