Thursday, March 28, 2024
Home » போக்குவரத்து பொலிஸார் 24 மணிநேரம் உஷார் நிலை
மதுபோதையில் வாகனம் செலுத்துதல்

போக்குவரத்து பொலிஸார் 24 மணிநேரம் உஷார் நிலை

by Gayan Abeykoon
December 28, 2023 8:57 am 0 comment

ண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் 24 மணிநேரமும் இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு   தெரிவித்தனர். பண்டிகைக் காலத்தின் போது அதிகளவான விபத்துகள் ஏற்படுவதை ஏற்கெனவே அவதானித்த நிலையில், பெறுமதியான உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த பொலிஸார், தமது நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT