Friday, March 29, 2024
Home » மருத்துவரின் ஆலோசனையின்றி Antibiotic பயன்பாடு வேண்டாம்
நாடு முழுவதும் பரவும் வைரஸ் தொற்று

மருத்துவரின் ஆலோசனையின்றி Antibiotic பயன்பாடு வேண்டாம்

by Gayan Abeykoon
December 28, 2023 8:55 am 0 comment

நாடு முழுவதும் தற்போது பரவிவரும் இன்புளூவன்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளுக்கு மருத்துவ ஆலோசனையின்றி நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) மருந்துகளை பயன்படுத்தக்கூடாதென, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.

நீண்ட நாட்களாக காய்ச்சல் நீடிக்குமாயின், உடனடியாக அரசாங்க மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.

வைரஸ் தொற்றுகள் காற்றின் மூலம் வேகமாக பரவுவதால் 60 வயதுக்கும் மேற்பட்டோர், கர்ப்பிணிகள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தம்மை பாதுகாக்க முகக்கவசத்தை அணிய வேண்டுமெனவும், அவர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT