85
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப்பகுதி வேளாண்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாம்போதிகளுக்கு அருகிலுள்ள வயல்நிலங்களே பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. குடலைப்பருவ காலத்தில் மழையினால் நீர்ப்பிரவாகம் உருவாவதால் விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாவடிப்பள்ளி தாம்போதிக்கருகாமையில் உள்ள வயல்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்