Home » வடக்கு, கிழக்கில் பல தடவைகளில் மழைக்கு வாய்ப்பு

வடக்கு, கிழக்கில் பல தடவைகளில் மழைக்கு வாய்ப்பு

- நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை

by Rizwan Segu Mohideen
December 23, 2023 9:24 am 0 comment

– மலையக பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று

இன்றையதினம் (23) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப. 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT