கெக்கிராவ மல்தெனிபுர பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடய முன்னாள் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட ஆறு பேரை, கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கெக்கிராவ பொலிஸ் பிரிவின் மல்தெனிபுர பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில், இவர்கள் கைதாகினர். இச்சுற்றிவளைப்பு நேற்று (21) நடந்தது. புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் கெக்கிராவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35,42,47,53,55,58 வயதுடைய கெக்கிராவ மல்தெனிபுர, ஆண்டியாகல, தம்பேவட்டவன, கலேவல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்