Friday, March 29, 2024
Home » ஜப்பானில் தொழில் தருவதாக பல இலட்சம் ரூபா பண மோசடி

ஜப்பானில் தொழில் தருவதாக பல இலட்சம் ரூபா பண மோசடி

by sachintha
December 22, 2023 7:13 am 0 comment

அநுராதபுரத்தில் ஒருவர் கைது

ஜப்பானில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர். இவர் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாகவும் பல இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பெண்ணொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றுக்கு இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சந்தேக நபரின் வெளிநாட்டு பயண அனுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது. இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு (19) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT