சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (20) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்ற கைதி எம்பிலிப்பிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்று வலி எனக்கூறி எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு 10,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டப்பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், அவர் எம்பிலிபிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரது தண்டனை காலம் எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமையும் விசேட அம்சமாகும்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய நபர் எம்பிலிப்பிட்டிய வெவ்வத்துர பிரதேசத்தில் வசிப்பவராவார்.
தப்பியோடிய கைதியை கண்டுபிடிக்க சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.