Home » கிளிநொச்சி மாவட்ட வெள்ளம் அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்

கிளிநொச்சி மாவட்ட வெள்ளம் அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்

by Gayan Abeykoon
December 21, 2023 9:30 am 0 comment

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். கிளிநொச்சி கண்டாவளை பாடசாலை மற்றும் முருகானந்தா ஆரம்ப பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை நேரடியாக சந்தித்த அமைச்சர், அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தார். அத்துடன் இரணைமடுக்குளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT