Home » போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

by Prashahini
December 21, 2023 10:29 am 0 comment

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில், பெண்ணொருவர், போதை பொருளுடன் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 23,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் மற்றும் நெல்லியடி பகுதியில் இளைஞன் ஒருவர் ஆகிய இருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள, பருத்தித்துறை நீதவான் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT