Friday, April 19, 2024
Home » 8 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

8 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

by Prashahini
December 21, 2023 9:46 am 0 comment

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த மீனவர்கள் நேற்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT