71
இயலாமையுடைய நபர்களுக்கு டிசம்பர் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே ஆகியோரும், தலைவரின் அனுமதியுடன் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மற்றும் (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோர் கலந்துகொண்டனர்.