Home » தேர்தல்களில் லங்கா பொதுஜன பெரமுன சிந்தித்து வாக்களிக்கும்

தேர்தல்களில் லங்கா பொதுஜன பெரமுன சிந்தித்து வாக்களிக்கும்

அரசாங்கத்தின் தலைவர் எமது கட்சியைச் சேர்ந்தவரில்லை

by Gayan Abeykoon
December 21, 2023 10:00 am 0 comment

ரசாங்கத்தின் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுன கட்சி இருந்தாலும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர் மற்றும் அரச தலைவர் வேறு கொள்கையை பின்பற்றும் மற்றுமொரு அரசியல் கட்சியின் தலைவராவாரென, முன்னாள் ஜனாதிபதியும் பொது ஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் போது அவ்வாறு வாக்களிக்கப்படும் கட்சியின் வரிக் கொள்கை மற்றும் கடந்த கால பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகரித்த வரி விதிப்புக் காரணமாக நாட்டில் கல்விமான்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்த நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ள மை சிக்கல்களை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT