கல்வி அமைச்சின் ஆய்வுகள் மற்றும் புத்தாக்க பிரிவும் லேக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடும் ‘வித்யா ‘ (அறிவியல்) மும்மொழி இணையத்தள e பத்திரிகையின் முதலாவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் நேற்று (20) லேக்ஹவுஸ் பணிப்பாளர் சபை மண்டபத்தில் நடைபெற்றது. ‘ வித்யா ‘ மும் மொழி இணையத்தள e பத்திரிகையின் ஆண்டு நிறைவு பதிப்பு சஞ்சிகையை லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், கல்வி அமைச்சின் ஆய்வுகள் மற்றும் புத்தாக்க பிரிவின் மேலதிக செயலாளர் சமந்தி வீரசிங்கவிடம் கையளித்தார்.
கல்வி அமைச்சின் ஆய்வுகள் மற்றும் புத்தாக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) குமாரி மீகஹகொட்டுவ, பணிப்பாளர் நாயகம்( ஆய்வுகள்) பி. எம் தர்மதிலக்க, உதவிப் பணிப்பாளர் (ஆய்வுகள்) எஸ். கே .லக்மினி, லேக்ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சிசிர பரணதந்திரி, லேக்ஹவுஸ் அரசாங்க தொடர்புகள் திணைக்கள முகாமைத்துவ ஆசிரியர் சமந்த கருணாசேக்கர உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.