Wednesday, April 24, 2024
Home » ஜன.04 முதல் 31 வரை GCE A/L பரீட்சை

ஜன.04 முதல் 31 வரை GCE A/L பரீட்சை

சகல ஏற்பாடுகளும் பூர்த்தி---

by Gayan Abeykoon
December 21, 2023 1:00 am 0 comment

2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் 2024 ஜனவரி 04 ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 04ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பரீட்சை தொடர்பான அட்டவணைகள், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் கிடைக்காவிட்டால், பாடசாலை அதிபர்கள், தனியார் பரீட்சார்த்திகள் ஆகியோர் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரவேசித்து ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT