Thursday, March 28, 2024
Home » சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள்
மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள்

by Gayan Abeykoon
December 21, 2023 6:35 am 0 comment

ன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பெரியமடு மற்றும் ஈச்சளவக்கை ஆகிய கிராம மக்களுக்கு உதவிகள் தேவை என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக மன்னார் நலன்புரி சங்கம் முன்வந்து உதவிகளை செய்துள்ளது.

அதற்கமைவாக மன்னார் நலன்புரி சங்கம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விபரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது இப்பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT