மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளுக்காக 60 திறன் அபிவிருத்தி வகுப்பறைகளை உருவாக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கிணங்க நுவரெலியா, கண்டி, மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கே இந்த திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்படவுள்ளன.
இரண்டு வருடங்களில் இந்த திறன் அபிவிருத்தி வகுப்பறைகளை உருவாக்குவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் அதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கான செலவு 526.20மில்லியன் ரூபாவாகும் என்றும் அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்காக 310 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கள்அமைச்சு, இந்திய தூதரகம் ஆகியன இணைந்து இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்