Tuesday, March 19, 2024
Home » தாய்வான் தேர்தல்களில் தலையிட சீனா முயற்சி

தாய்வான் தேர்தல்களில் தலையிட சீனா முயற்சி

by Gayan Abeykoon
December 21, 2023 9:36 am 0 comment

தாய்வானில் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் முயற்சிகளை சீனா முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் தாய்வானில் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் போட்டியிடும் சீன சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளை சீனா மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள தாய்வான் அதிகாரிகள், நூற்றுக்கணக்கான உள்ளூர் தாய்வான் அரசியல்வாதிகள் குறைந்த செலவில் சீனாவுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதத்தில் தாய்வானின் நீரிணைப்பகுதியிலும் கடற்பரப்பிலும் சீன படையினரின் நடமாட்டங்களும் ஆராய்ச்சி கப்பல்களின் பிரசன்னமும் அதிகரித்து காணப்பட்டன. இவை உண்மையான உளவியல் போரென தாய்வான் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தாய்வான் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் 12 போர் விமானங்களும் வானிலை பலூனும் எம்மைக் கடந்து சென்றதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT