அகத்தியர் மருத்துவ கூடலின் நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் அகத்தியரின் ஜனன தினத்தை முன்னிட்டு அகத்தியர் மருத்துவ விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
அகத்தியர் மருத்துவ கூடல் தலைவர் வர்ணகுலசிங்கம் பிரவீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழா, கிரான்குளம் அனைத்து பொது அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது.
இதன்போது இரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், புற்றுநோய், நீரிழிவு, குழந்தையின்மை தொடர்பாக மருத்துவ ஆலோசனை வழங்கல், விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தல் ஆகியவை நடைபெறவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்துகொண்டு பயனடையுமாறும் 18- – 60 வயதுக்கு இடைப்பட்ட ஆண், பெண் இருபாலரும் இரத்ததானம் செய்து உதவுமாறும் அகத்தியர் மருத்துவ கூடல் தலைவர் வர்ணகுலசிங்கம் பிரவீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விழாவில் ஆன்மிக அதிதியாக சிவசிறி செ.சுப்பிரமணியக்குருக்களும் கெளரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியக் கலாநிதி க.அருளானந்தம், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தே.திலக்ஷன், சித்தமருத்துவர் வைத்தியர் தி.கீர்த்திகா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாண்டிருப்பு தினகரன் நிருபர்