118
ஹோமாகம பகுதி வங்கியொன்றிலிருந்து துப்பாக்கி முனையில் ஏழு இலட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் முற்பகல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கொள்ளையர்கள் ஹோமாகம, தலகல பிரதேசத்திலிருந்து அங்கு வருகைதந்துள்ள நிலையில் பணத்தைக் கொள்ளையடித்த பின்னர் மீண்டும் அந்த பிரதேசத்திற்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம, பிடிபன, கபடாவத்த சமுர்த்தி வங்கிக்கு துப்பாக்கியுடன் பிரவேசித்த இரண்டு நபர்களே இவ்வாறு ஏழு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்