கொழும்பு மாநகர சபையின் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு திணைக்களத்துக்கு கொழும்பு 12 இல் அமைக்கப்பட்ட பீர்சாஹிபு வீதி சனசமூக நிலையம் பொதுமக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலக பணிக்குழாம் பிரதம நிர்வாகியுமான சாகல ரத்னாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு சனசமூக நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன்போது, ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி இஹ்ஸானியா அரபுக் கல்லூரி மாணவர்களின் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க, மாநகர சபை ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன உள்ளிட்ட பிரதேச தலைவர்களும் கலந்துகொண்டனர்.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)