Home » உருளைக்கிழங்கு விதையின் மாபியாவா? மு.தம்பிராஜா சந்தேகம்

உருளைக்கிழங்கு விதையின் மாபியாவா? மு.தம்பிராஜா சந்தேகம்

by Prashahini
December 20, 2023 5:15 pm 0 comment

உருளைக்கிழங்கு விதையின் மாபியாவா? என்ற சந்தேகம் வந்திருக்கின்றது என அடக்கு முறைக்கு எதிராக அமைப்பு செயற்பாட்டாளர் மு.தம்பிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (20) நடை பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்:

யாழ். மாவட்டத்தில் 60 வீதமானவர்கள் விவசாயத்தில் தான் தங்கியிருக்கின்றனர். யாழ். மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட உருளைக் கிழங்கு விதையினங்கள் பக்டீரியா நோய்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது.

இவ் உருளைக்கிழங்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஹேலிஸ் தனியார் நிறுவனத்தினால் உருளைக்கிழங்கு விதையினங்கள் வழங்கப்பட்டு அதிகூடிய விளைச்சலை பெற்றுள்ளனர். இம்முறை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு விதையினங்கள் வேறு ஒரு தனியார் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அது யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு அது விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த விதையினத்தில் பக்டீரியா நோய் ஏற்பட்டுள்ளது..

யாழ். மாவட்ட விவசாயத்தினையும் , மண்ணினையும் இல்லாது ஒழிக்க விவசாயத் திணைக் களத்தினைச் சேர்ந்த ஏதோ ஒரு உருளைக் கிழங்கு மாபியா முயன்று இருப்பதாக அடக்கு முறைக்கு ஏதிராக அமைப்பு சந்தேகத்தினை வெளியிட்டுள்ளது.

யாழ். மாவட்ட விவசாயிகள் நம்பியிருக்கின்றனர். வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கின்றனர்.விவசாயத்தினையும் , மண்ணினையும் இல்லாது ஒழிக்க நன்கு திட்டமிட்ட ,உருளைக்கிழங்கு விதையின மாபியாவா? அல்லது விவசாய உருவாகாத மாயியாவா? என்ற சந்தேகம் வந்திருக்கின்றது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT