Home » “ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்” என மௌலவி கூறினார்

“ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்” என மௌலவி கூறினார்

- மத்ரஸாவில் கட­மை­யாற்­றிய பெண் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
December 19, 2023 6:26 pm 0 comment

ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன் என சாய்ந்தமருது மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் தெரிவித்ததாக, அங்கு கண்காணிப்பாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலொன்றை வழங்கியுள்ளார்.

கடந்த டிசம்பர் 05ஆம் திகதி சாய்ந்தமருது மத்ரஸாவில் சடலமாக மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின் மரணம் தொடர்பில், சிசிடிவி (CCTV) தொடர்பான பணியில் ஈடுபடும் தொழிநுட்பவியலாளர் வழங்கிய அதிர்ச்சி தரும் தகவலைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவிய 3 பிள்ளைக்கு தாயான குறித்த பெண் தனது பிள்ளைகளின் மத்ரஸா கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் மௌலவியை சந்தித்த அப்பெண் உதவி கோரியதாகவும், குறித்த மௌலவி தனக்கு மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றை வழங்கியதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

அந்த வகையில், சம்­பவ தின­த்­த­ன்று என்ன நடந்­தது என, அம்மத்ரஸாவில் கட­மை­யாற்­றிய கண்காணிப்பாளரான 34 வயதான குறித்த பெண்மணி வழங்கிய தகவலே இது.

நேர்காணல்: ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்

மத்ரஸா மாணவனின் மரணம்; அழித்த CCTV காட்சியை எடுக்க முடியுமா என கேட்ட மௌலவி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT