Friday, March 29, 2024
Home » வளிமண்டல தளம்பல்: மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்

வளிமண்டல தளம்பல்: மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்

- வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
December 16, 2023 8:14 am 0 comment

– நாட்டின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

அலை போன்ற வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (16) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல், வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT