இலங்கை ரூபவாஹினி சேவையில் நாளை 16 ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒளிப்பரப்பாகும் “சந்துரு சுயமிய” எனும் நிகழ்ச்சியில், இலங்கையின் புகழ்பெற்ற தமிழ், சிங்கள பின்னணிப் பாடகர் கலாபூஷணம் முத்தழகு சூரியகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சி கடந்த 09ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி சேவையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி 16ஆம் திகதி மறு ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி தனது 66 ஆண்டு கால இசைத்துறை வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளதென பின்னணிப் பாடகர் கலாபூஷணம் முத்தழகு சூரியகுமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இவருடன் இலங்கையின் புகழ்பெற்ற தமிழ், சிங்கள பின்னணிப் பாடகி கலாபூஷணம் திருமதி எஸ் கலாவதியும் இணைந்து பாடி சிறப்பித்துள்ளார்.