Thursday, March 28, 2024
Home » வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: நான்கு ஆண்டுகளில் 7,32,000 பேர் பயணம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: நான்கு ஆண்டுகளில் 7,32,000 பேர் பயணம்

by sachintha
December 15, 2023 8:59 am 0 comment

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர், இலங்கையிலிருந்து சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குருநாகல் கிளை பணியகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுக்கு இணங்க, இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தகவல்களுக்கு இணங்க இலங்கையர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும் தொழிலாளர்களாகவும் மின்சார கைத்தொழில் துறை வேலைவாய்ப்புக்காகவும் சாரதி உள்ளிட்ட ஏனைய தொழில்களுக்காகவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றனர்.

இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டே சட்ட ரீதியாக மேற்படி 07 இலட்சத்து 32 ஆயிரம் பேரும் வெளிநாடு சென்றுள்ளனர்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT