கங்காராம விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தும் வகையில், உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மஹாசங்கரத்தினர் அழைக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு கங்காராம விகாரை வளாகத்தில்நேற்று நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்றுவரும் 08 ஆவது தென்சீனக் கடல் பௌத்த ஷென்ஜன் வட்டமேசை மாநாட்டில் இணைந்து கொண்ட வணக்கத்துக்குரிய மாஸ்டர் யின் ஷுன் உள்ளிட்ட சீனத் துறவிகள், இலங்கையின் அனைத்துப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மஹா சங்கத்தினர் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
கங்காராம விகாராதிகாரி கலாநிதி அஸ்ஸஜி தேரரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபுக்கள், ஆலய நன்கொடையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.