172
நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு நடத்தும் நடமாடும் சேவை நாளை (16) நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்திலும் நாளை மறுதினம் (17) மாத்தளையிலும் நடைபெறவுள்ளது. இச்சேவையில் பொதுமக்களுக்குத் தேவையான சட்ட ஆவணங்கள் வழங்கப்படவுள்ளன. நாளை (16) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நுவரெலியாவிலும் நாளை மறுதினம் (17) மாத்தளையிலும் இச்சேவை நடைபெறவுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், சட்ட உதவி ஆணைக்குழு, நட்ட ஈடு வழங்கும் அலுவலகம், இணக்க சபை ஆணைக்குழு, காணாமல் போனோர் அலுவலகம், திணைக்களம் ஆகியவற்றில் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
(தலவாக்கலை குறூப் நிருபர் )