வெனிசுவெலா நெடுஞ்சாலையில் 17 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தலைநகர் கரகஸையும் நாட்டின் கிழக்குப் பகுதியையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் விபத்து நேர்ந்தது.
நெடுஞ்சாலையில் ஒரு சிறு விபத்துக் காரணமாக வாகனங்கள் நின்று போயின. அந்த சமயத்தில் வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று கார்களில் மோதியது. அடுத்தடுத்த வாகனங்கள் வரிசையாக நின்ற வாகனங்களில் மோதின.
சம்பவத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.
விபத்து நடந்த இடத்தில் தீப்பற்றி எரிவதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
நெடுஞ்சாலையில் அஸ்பால்ட் கலவை இடும் பணிகள் நடந்துவருவதால் அவசரச் சேவைகள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது.