Home » இறுதியில் அசோகாவுடன் யாழ். மத்தி பலப்பரீட்சை
பாடசாலை கிரிக்கெட்:

இறுதியில் அசோகாவுடன் யாழ். மத்தி பலப்பரீட்சை

by sachintha
December 15, 2023 10:04 am 0 comment

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் பிரிவு 2 குழு பி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி இன்று (15) கொழும்பு, அசோகா வித்தியாலயத்தை பண்டாரகம கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

யாழ். மத்திய கல்லூரி தனது குழுவில் இரண்டாவது இடத்தைப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் ஹேனகம மத்திய கல்லூரி அணியை எதிர்கொண்ட யாழ். மத்தி போட்டியில் முடிவு கிடைக்காதபோதும் முந்தைய போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

அம்பலங்கொடை பீ. டி. எஸ். குலரத்ன கல்லூரிக்கு எதிரான அரையிறுதியில் வெற்றியீட்டியே யாழ். மத்திய கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கொழும்பு, அசோகா வித்தியலயம் தனது குழுவில் 4 ஆவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறியபோதும் காலிறுதிப் போட்டியில் ஜாஎல, கிறிஸ் கிங் கல்லூரியையும் தொடர்ந்து அரையிறுதியில் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி அணிக்கு நிஷான்தன் அஜே தலைமை வகிப்பதோடு கொழும்பு, அசோகா வித்தியாலய அணிக்கு உமேஷ் கெல்தரா தலைவராக செயற்படுகிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT