செல்வாக்கு மிக்க உலக தலைவர்கள் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மோர்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடாத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை வழங்கும் நிறுவனமான ‘குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங் டிராக்கரின்’ கருத்துப்படி, இந்தியாவில் 76 சதவீதமானோர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்’ என்றுள்ளது.
செல்வாக்கு மிக்க உலகத் தலைவர்கள் தொடர்பில் நடாத்தப்பட்ட இவ்வாய்வின் படி, பிரதமர் மோடி தொடர்ந்தும் முதலிடத்தை பெற்றுள்ள அதேநேரம், இரண்டாம் இடத்தை 66 சதவீதத்தினரின் விருப்பத்தைப் பெற்றுள்ள மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரும் மூன்றாம் இடத்தை 58 சதவீதத்தினரின் விருப்பத்தைப் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் பெற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் மோடி உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 37 சதவீதத்தினரும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 31 சதவீதத்தினரும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 25 சதவீதத்தினரும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானுக்கு 24 சதவீதத்தினரும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.