Thursday, March 28, 2024
Home » வளிமண்டல தளம்பல்: இன்று முதல் சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிப்பு

வளிமண்டல தளம்பல்: இன்று முதல் சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிப்பு

- வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
December 14, 2023 7:50 am 0 comment

– பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

வளிமண்டலத்தில் காணப்படும் அலை போன்ற மாறும் தளம்பல் நிலை காரணமாக, இன்று (14) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலைமையில் தற்காலிக அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு , மாத்தளை பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல பகுதிகளில் பி.ப. 1 .00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ல இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் .

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT