196
ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு விருது வழங்கல் விழா கடந்த 12ஆம் திகதி கல்கிஸை ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்டான்லி சமரசிங்க, எப்.எல்.டீ.மஹிந்தபால, சீதா றஞ்சனி, எஸ்.தில்லைநாதன் மற்றும் ஏ.எல்.எம்.நிலாம் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொண்டனர்.