இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து நேற்றுமுன்தினம் கல்கிசை மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் விருது வழங்கும் விழாவில் தினகரனின் மூத்த ஊடகவியலாளர்களான எம்.ஏ.எம். நிலாம், கரவெட்டி எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் வாழ்நாள் சாதனையாளர் அதியுயர் விருதும், பி. பாலசிங்கம் விசேட கௌரவமும் பெற்றுக் கொண்டதை படத்தில் காணலாம். எம்.ஏ.எம். நிலாம், எஸ். தில்லைநாதன் ஆகியோருக்கான விருதை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளரும், வீரகேசரி மற்றும் வீரகேசரி வார இதழ் பிரதம ஆசிரியருமான எஸ். ஸ்ரீகஜன் வழங்குவதையும், மூத்த ஊடகவியலாளர் பாலசிங்கத்துக்கான விருதை Sri Lanka news papers society மற்றும் விஜய நியூஸ் பேப்பர் நிறுவனத்தின் தலைவரான ரஞ்சித் விஜயவர்த்தன வழங்குவதையும் காணலாம்.
Sri Lanka news papers society
142