புத்தசாசனத்துக்கு முன்னுதாரணமான சேவைகளாற்றிய கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரயின் விஹாராதிபதி நவ கோறளையின் பிரதம சங்கநாயக்க கலபொட ஞானிஸ்ஸர தேரரின் 80 ஆவது பிறந்த தினம் (14) இன்றாகும். ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், இவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடர் புண்ணிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார். தற்போது சுகவீனமடைந்துள்ள ஞானிஸ்ஸர
தேரருக்கு ஆசி வழங்கும் வகையில் இந்தத் தொடர் புண்ணிய நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
கங்காராம விகாரையின் சிறிய துறவி என பிரபலமடைந்த இவர், நாட்டி ல் பௌத்தத்தின் வளர்ச்சிக்கும் சமூக மற்றும் கலாசார வளர்ச்சிக்கும் பல சேவைகளைச் செய்துள்ளார்.
1943ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி மாத்தறை கலபொடவில் பிறந்த ஞானிஸ்ஸர தேரர், 1959ஆம் ஆண்டு தேவுந்தர ரத்னஜோதி தேரரின் போதனையின் கீழ், துறவற வாழ்க்கைக்கு பிரவேசித்தார். மல்வத்து மகாநாயக்க தேரரால் 2003 ஆம் ஆண்டு மேல்மாகாண பிரதம சங்கநாயக்கராக நியமிக்கப்பட்ட கலபொட ஞானிஸ்ஸர தேரர், தமது துறவற வாழ்விலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.