Friday, April 19, 2024
Home » அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு சக்கரநாற்காலி வழங்கிய மாணவ நண்பர்கள்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு சக்கரநாற்காலி வழங்கிய மாணவ நண்பர்கள்

by gayan
December 14, 2023 9:08 am 0 comment

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 1996 ஆம் ஆண்டு சாதாரண தரம் கல்விகற்ற மாணவ நண்பர்கள் குழாத்தினரால் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்து, வைத்தியசாலையின் நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளினை கருத்திற் கொண்டு இச் சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் அல்-ஹாபிழ் யு.எல்.எம். வபா அவர்களிடம் சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவ நண்பர்கள் குழாத்தின் தலைவர் தாதிய உத்தியோகத்தர் எம்.எல்.ஜெசீல், செயலாளர் எஸ்.எம்.சித்தீக் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் முன்னாள் தலைவரும், அதிபருமான ஏ.எம்.மிஸ்வர், ஆசிரியர் கே.எல்.எம்.முனாஸ், முன்னாள் செயலாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எம். நபீஸ்தீன், சஷா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளரும் உறுப்பினருமான எஸ். அஜ்வர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை நண்பர்கள் குழாம் உறுப்பினர்கள் இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

றிசாத் ஏ. காதர்…?

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT