பிராந்திய பாதுகாப்பு குறித்த பொதுவான விடயங்களில் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஜப்பான் மற்றும் வியட்நாம் இணக்கம் கண்டுள்ளன.
ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கும் வியட்நாம் ஜனாதிபதி வொ வான் தௌங்வுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அவர்கள் அறிவித்தனர்.
ஜப்பானிய பிரதமர், சுதந்திரமானதும் திறந்ததுமான இந்தோ–பசுபிக் பிராந்தியத்தை அடைவதற்கு வியட்நாம் முக்கிய பங்குதாரராகும் என்று குறிப்பிட்டதோடு உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி என்ற வகையில் புதிய இராணுவ உதவியையும் வியட்நாமுக்கு அவர் வழங்கினார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், காலநிலை மாற்றம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கூட்டறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.