இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து நேற்று முன்தினம் கல்கிசை மவுண்ட் லவேனியா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் உயர்விருது பெற்றுக்கொண்ட தினகரனின் மூத்த ஊடகவியலாளர்களான எம்.ஏ.எம். நிலாம், கரவெட்டி எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் நேற்று தினகரன் ஆசிரியபீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள். தினகரன்/ வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் எஸ். செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு விழாவின் போது, எம்.ஏ.எம். நிலாம், கரவெட்டி எஸ். தில்லைநாதன் ஆகிய இருவரும் பொன்னாடை போர்த்தியும், சந்தனமாலை அணிவித்தும் பாராட்டிக் கௌரவிப்பு நிகழ்வு தினகரன் ஆசிரியபீடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள்: ஷான் ரூபஸ்சர)