நாட்டில் கடந்த இரு தினங்களில் நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. காணாமலான நான்கு சிறுவர்களும் 15 முதல் 16 வயதுக்கிடையிலானவர்களாவர். வெரஹர, தர்மபுரம், ஹற்றன் மற்றும் பொல்பிட்டிய பிரதேசங்களிலிருந்தே இச்சிறுவர்கள் காணாமலாகியுள்ளனர்.
மேலும், நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதி, பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் எடரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் இந்த தினங்களில் காணாமலாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நோர்வூட்டில் 82 வயதான பெண்ணொருவரும், மொறட்டுவையில் 75 வயதுடைய ஆணும், பள்ளமயில் 70 வயதான தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் ஒருவரும் காணாமலானோரில் அடங்குகின்றனர்.
இதற்கிணங்க, கடந்த இரு தினங்களில் 12 பேர் காணாமலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.