Friday, April 19, 2024
Home » யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைவு

யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைவு

- கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை

by Prashahini
December 13, 2023 9:53 am 0 comment

யாழ். மாவட்டத்தில் சிலர் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சீனி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதோடு, தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும், இதனால் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பிலும் பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT