Thursday, March 28, 2024
Home » T20 கிரிக்கெட் 2 ஆவது ஆட்டம்; தென் ஆபிரிக்கா வெற்றி

T20 கிரிக்கெட் 2 ஆவது ஆட்டம்; தென் ஆபிரிக்கா வெற்றி

- தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை

by Prashahini
December 13, 2023 10:35 am 0 comment

இந்தியா – தென் ஆபிரிக்கா இடையிலான 2ஆவது T20 போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று (12) நடைபெற்றது.

இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தெரிவுச் செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் பூஜ்ஜியம் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிங்கு சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ஓட்டங்களை விளாசினார். கடைசி ஓவரின் போது மழை குறுக்கிட்டதால், 19.3 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்திருந்தது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக டிஎல்எஸ் (Duckworth Lewis Stern ) முறையில் 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தால் தென் ஆபிரிக்க வெற்றி பெரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 49 ஓட்டங்கள் மற்றும் கேப்டன் மார்க்ரம் 30 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆபிரிக்க அணி.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT