Home » வங்கிக் கணக்குகளில் புதிய தொழில்நுட்ப முறைமை
ஓய்வூதியம், ஊனமுற்றோர், முதியோர் கொடுப்பனவுகள்

வங்கிக் கணக்குகளில் புதிய தொழில்நுட்ப முறைமை

by mahesh
December 13, 2023 6:40 am 0 comment

தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம், ஊனமுற்றோர் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு புதிய தொழில்நுட்ப முறைமையொன்று தயாரிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்குத் தேவையான டிஜிட்டல் மயமாக்கல் முறையை விரைவில் தயாரிக்குமாறு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் தபால் துறை, அடுத்த ஆண்டு இலாபம் ஈட்டும் வகையில் நஷ்டத்தை குறைத்து வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு செயல்படுவது தவறு என்றார்.

நியாயமற்ற தபால் வேலைநிறுத்தத்தால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்களின் நலன் கருதி, இந்நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT