Thursday, March 28, 2024
Home » புத்தளம் கற்பிட்டி கடலில் டொல்பின் வசந்தம் ஆரம்பம்

புத்தளம் கற்பிட்டி கடலில் டொல்பின் வசந்தம் ஆரம்பம்

by mahesh
December 13, 2023 2:00 pm 0 comment

புத்தளம் – கற்பிட்டி கடலில் டொல்பின் வசந்த காலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்தனமான டொல்பின்கள் மற்றும் ராட்சத திமிங்கிலங்கள் அலைகளில் சுதந்திரத்தை அனுபவிப்பதை நேரில் காணக்கூடியதாக இது அமைந்துள்ளது.

டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களை இம்மாதம் முதல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரை காணலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக காலை நேரங்களில் டொல்பின்களைப் பார்ப்பது எழிதாக இருக்கும்.

குறித்த டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை இலந்தையடி, கண்டகுழி, கற்பிட்டி ஆகிய கடற்பிரதேசங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

டொல்பின்கள், பாட்டில்நோஸ் டொல்பின்கள், புள்ளிகள் கொண்ட டொல்பின்கள், ஃப்ரேசரின் டொல்பின்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஹம்பக் டொல்பின்களும் கற்பிட்டி கடலில் காணப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT