திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் நலன் கருதி நேற்று செவ்வாய்க்கிழமை (12) மொரவெவ பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா தலைமையில் இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாரம் தோறும் பிரதி திங்கட்கிழமையில் மொரவெவ சுற்றுலா நீதிமன்றம் இயங்குமென, திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருகோணமலை பிரதான நீதவான் பயாஸ் ரஸ்ஸாக், மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி, மாவட்ட நீதிபதி எம்.கணேஷராஜா உட்பட சட்டத்தரணிகள் பலர் கலந்துகொண்டனர்.
மொரவெவவில் சுற்றுலா நீதிமன்றம் திறந்துவைப்பு
162